ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஜெகன் மோகன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஜூலை 28 முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணம் செவ்வாயன்று விஜயவாடாவை அடைந்த நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.